Wednesday 29 November 2017

Singles

மணிக்கணக்காய்
முனுமுனு உரையாடல்
பெற்றோருக்கு தெரியாமல்
பெரிய பெரிய சந்திப்பு
மனதிற்கு பிடித்தவரிடம்
மறைக்கப்பட்ட பேச்சு
இனிய தூக்கம் இல்லாமல்
இரவு நேர உரையாடல்
பகலில் குளுமை
இரவில் வெப்பம்
நிஜத்தை மறந்து
நிழலில் ஒரு வாழ்க்கை!
கற்பனையில் வாழும்
கனவு உலகம்...
இவையெல்லாம்
தேவையில்லை
'singles'-களுக்கு!
நாம் நாமாக
இருக்கும்
ஒரு இனிய உலகம்!
சுதந்திரமாய்
சுற்றித்திரியும்
சுவாரசிய வாழ்க்கை!
ஒவ்வொரு
நொடியும்
அழகிய நினைவுகளாய்...
'singles'-களுக்கு!
'Singles' தாங்க மாஸ்😎!!!

Tuesday 28 November 2017

பெண்ணின் காதல்

சில்மிஷ சமிஞ்ஙைகளுடன்
நாணங்கள் மத்தளமிட
மந்திரக் கயிற்றால்
மூன்று முடிச்சிட்டு
முத்தமிட்டாய்!
கண்ணீர் துளிகள்
எட்டிப் பார்ப்பதை
கணப் பொழுதில்
கண்டறிந்து, கைப்பிடித்து
சொல்லாமல் சொன்னாய்
நான் இருக்கிறேன் என்று
அதிகாலையில்
உன் சிகை முடியை
கோதி விடுவதில் இருந்து
தொடங்கும் நம் விளையாட்டு!
கம்பீரமாய் உடை அணிந்து
நீ பணிக்கு
கிளம்பும் வேளையில்
சின்னதாய் ஒரு தவிப்பு!
உனக்காய் அன்பினால் நான் செய்த
உணவை உண்ட பின்பு
உன் அழைப்புக்காக
காத்திருக்கும் என்னை
அழைத்து 'சாப்டியா?'
என்று கேட்கும் வேளையில்
சாப்பிட்ட திருப்தி எனக்கு!
மாலை மங்கும் வேளையில்
மன்மதனான உனக்காய்
வாசலில் நான்...
அன்றைய நிகழ்வுகளை
அலசிப் பேசும் நொடிகளில்
உன் ஆழ்ந்த பார்வையை
சந்திக்க முடியாமல் தடுமாற்றம்
என் இமைகளிடம்...!
என் மடியில் உன் தலையணைத்து
உன்னை உறங்க வைக்கும் வேளையில்
தாயாய் நான்!
என் செல்லக் குழந்தையாய் நீ...!
கண்களில் ஈரம் தெரியவர
கனவென்பதை அறிந்தேன்!
முகம் தெரியா நாயகனே!
ஒட்டு மொத்த அன்பையும்
ஒன்று சேர்த்து வைத்திருக்கிறேன்
என் வருங்கால உனக்காக...
வாங்கிக் கொள்ள
விரைந்து வாடா
என் கனவுக் கள்வா...!!!💞

Wednesday 15 November 2017

என் அன்புத் தோழி!

கவிதை எழுதச் சொன்னாய்
கருணை வடிவான உன் அழகு முகத்தை
கண்ட அந்த நாளுக்கு பின்னோக்கி சென்றேன்...

கருமேகங்களாய் சூழ்ந்திருந்த
என் வாழ்க்கையில்
மழைச்சாரலாய் வந்தாய்!

துன்பத்தை துதிக்கவும்
மறக்க வைத்து
இன்பத்தில் மூழ்கடித்தாய்!

தரிசு நிலமாய் இருந்த என் மனதில்
அன்பென்னும் விதையூன்றி
நன்செய்யாய் மாற்றினாய்!

முகபாவனைகளால்
முன்னில் நிற்பவர்களை
மூழ்கடித்தாய்!

சிலிர்த்துப் போனேன்...
நீ செல்லப் பெயரில் அழைப்பதை
செவிமடுக்கும் வேளையில்!

கைபேசி உரையாடல்
மணிக்கணக்காய்
நமக்கே அறியாமல்!

உன் மொழி கேளாமல்
24மணி நேரம் கடந்தால்
அது கதிரவன் மேற்கே உதிக்கும் காலமே!

திரும்பிப் பார்த்தேன்
என் வாழ்க்கையை
நம் நிகழ்வுகளே இனிமையாய்...

என்னில் சரிபாதியாய்
என் வாழ்வின்
கீதமானாய்!

நட்சத்திரங்களாய் பலர் இருக்க
முழு நிலவாய் என் வானில்
நீ மட்டுமே!

பிரிய முடியா உறவு நீ
என்னில் பிரிக்க இயலா
உயிர் நீ!
என் அன்புத் தோழி!!!

Tuesday 31 October 2017

சிரிப்பு

உன் சிரிப்பலையில் மயங்கி
தான் இசைக்கவே மறந்ததை
என் காதோறம் கிசுகிசுத்து சென்றது
குயில்களின் கூவல்...!

முகம் தெரியா நாயகன்


முகம் தெரியா உன்னை
முழுவதுமாய் நினைக்கத் தொடங்கி விட்டேன்
பெயர் அறியா உன் பெயரை
என் பெயரோடு இணைத்துக் கொள்ளத் துடித்தேன்
ஒட்டு மொத்த அன்பையும்
ஒன்று சேர்த்து வைத்திருக்கிறேன்;
வாங்கிக் கொள்ள
நீ எப்பொழுது வருவாய்...?

தாய்

உன் வலியால் பிறந்ததால் தானோ என்னவோ
எனக்கு வலி வரும்போதெல்லாம்
உன்னையே அழைக்கின்றன என் உதடுகள்...!

Singles

மணிக்கணக்காய் முனுமுனு உரையாடல் பெற்றோருக்கு தெரியாமல் பெரிய பெரிய சந்திப்பு மனதிற்கு பிடித்தவரிடம் மறைக்கப்பட்ட பேச்சு இனிய தூக்கம...